தேனி மாவட்டத்தில் உள்ள அழகாபுரி கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து கொண்டுள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று சேகர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். இந்நிலையில் கதிர் நரசிங்கபுரம் கிராமத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் இருக்கையில் அமர்ந்து சேகர் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென கீழே விழுந்து படுகாயமடைந்த சேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.