தென்காசி மாவட்டத்தில் உள்ள பாலமார்த்தாண்டபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் பொன்னுதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பொன்னுத்துரைக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கடந்த 2014-ஆம் ஆண்டு தூங்கி கொண்டிருந்த லலிதா மீது பொன்னுதுரை மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்து கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பொன்னுதுரையை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த தென்காசி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் பொன்னுத்துரைக்கு ஆயுள் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.