தென்காசி மாவட்டத்தில் உள்ள கள்ளம்புளி காலனி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாதஸ்வர கலைஞரான சின்னராசு என்ற மகன் இருந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சின்னராசு மோட்டார் சைக்கிளில் சிவராமபேட்டையில் இருந்து வந்து கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் அனுமன் நதி தடுப்பு சுவரில் மோதி ஆற்றில் விழுந்தது.

இதனால் படுகாயமடைந்த சின்னராசு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சின்ன ராசுவின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.