தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் வீடியோவில் ஒருவர் கடையை மூடிய பின் செல்போனில் ஏதோ பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். அந்நேரத்தில் கடையின் கதவை திறந்து உள்ளே வரும் குழந்தை, மிட்டாயை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடிவிடுகிறது.

இதனை சிறிது நேரத்துக்கு பிறகு கடைக்காரர் பார்க்கிறார். ஆனால் அதற்குள் குழந்தை ஓடிவிட்டது. எனினும் குழந்தையை பிடிக்க பின்னால் ஓட முயற்சிக்கிறார் அந்த நபர். இருப்பினும் அந்த குழந்தையை அவரால் பிடிக்க முடியவில்லை. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.