குன்னூர் மரபாலம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் நேற்றைய தினமே தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய். அதே போல படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும்,  லேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்வும் நிவாரண நிதியாக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது மத்திய அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிப்பதாக தெரிவித்திருக்கிறார். அதேபோல காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும், உயிரிழந்ததற்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கும், காயமடைந்தவர்களுக்கு  50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என  தெரிவித்து இருக்கிறார்