இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தினம் தோறும் மக்களுக்கு அரசு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு இந்திய அஞ்சல் துறை ஐபோன் 15 இலவசமாக வழங்க உள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்தச் செய்தியுடன் வரும் லிங்கை கிளிக் செய்து 15 பேருக்கு பகிர வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள அஞ்சல் துறை, இந்தச் செய்திக்கும் அஞ்சல் துறைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றும் இது போன்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.