இந்தியாவில் பெண்களுக்கும் அனைத்திலும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வரும் நிலையில் பெண்களின் சுய வேலைவாய்ப்பை இலக்காக கொண்டு  மஹிளா அகலாம் நிதி திட்டம் என்ற பெயரில் மத்திய அரசால் SIDBI (Small Industrial Development Bank of India) மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு பத்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இந்த கடனை பத்து ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும். இந்த கடன் MSME, வர்த்தகம் மற்றும் உற்பத்தி துறைகளில் உள்ள வணிகங்களுக்கு வழங்கப்படுகின்றது. இது தொடர்பான முழுமையான விவரங்களுக்கு உள்ளூர் வங்கிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.