இந்தியா முழுவதும் இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை தூய்மை பண இயக்கம் நடத்த நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி தூய்மை பணிக்காக சுமார் 6.4 லட்சம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் முதல் முறையாக ராணுவம், கப்பல் படை மற்றும் விமான படையினரும் மக்களுடன் ஒன்றிணைந்து தூய்மை பணிகளை மேற்கொள்ள உள்ளனர். ரயில் நிலையங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் தூய்மை பணி நடைபெறுகின்றது.