சத்தீஸ்கர் பிஜப்பூர் மாவட்டத்தில் உசூர் மண்டல பா.ஜ.க தலைவராக இருந்து வந்தவர் நீலகண்ட கக்கேம். இவர் சென்ற 15 வருடங்களாக இப்பதவியில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நீலகண்ட கக்கேம் தன் உறவினரின் திருமணத்துக்காக கடந்த பிப்,.5 தனது சொந்த கிராமமான ஆவப்பள்ளிக்கு சென்றிருந்தார். அப்போது திடீரென நக்சலைட்டுகள் நீலகண்ட கக்கேம் வீட்டிற்கு புகுந்து அவரை வெட்டிக் கொலை செய்தனர். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதனால் சம்பவ இடத்திலேயே நீலகண்ட கக்கேம் இறந்துவிட்டார். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப் பகலில் பலரது கண் முன்னே நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.