தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மெயின் ரோட்டில் இருந்து நகரசபை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தைக்கு செல்லும் பாதை பாதையில் நேற்று காலையில் பொருட்கள் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது அந்த பகுதியில் இருந்த ஓடை பாலத்தில் சரிந்து நின்றுள்ளது. உடனே இதை பார்த்த கூலித் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து லாரியை எந்தவித சேதாரமும் இல்லாமல் தள்ளி மெயின் ரோட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.