மதுரை மாவட்டத்திலுள்ள பெருங்காமநல்லூர் கிராமத்தில் செல்வேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வேந்திரனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் செல்வேந்திரன் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2020-ஆம் ஆண்டு செல்வேந்திரனுக்கு 15 வயது சிறுவனுடன் திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. இதனால் செல்வேந்திரன், அவரது தந்தை முத்து, தாய் சத்தியபாமா, பெண்ணின் தாய் சித்தப்பா உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.