ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடியில் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவி கடந்த 1 மாதமாக பள்ளிக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவியிடம் பெற்றோர் விசாரித்தபோது, அப்பகுதியை சேர்ந்த கயல்விழி(45), உமா(34)  போன்றோர் தன்னை சில நபர்களிடம் அழைத்து சென்றதாக கூறி உள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பெற்றோர் ராமநாதபுரம் எஸ்பியிடம் புகாரளித்தனர்.

அதன்பின் விசாரணையில் பரமக்குடி நகர் அதிமுக அவைத் தலைவர் மற்றும் நகர் மன்ற உறுப்பினருமான சிகாமணி, மறத் தமிழர் சேனை நிறுவன தலைவர் புதுமலர் பிரபாகர், ரெடிமேட் கடை நடத்தி வரும் ராஜா முகமது போன்றோர் தன்னை கடத்தி சென்று கட்டாயபடுத்தி சென்ற 26/12/22 முதல் 21/02/2023 வரை பார்த்திபனூர் அருகேயுள்ள தங்கும் விடுதியில் வைத்து பலமுறை கூட்டு பலாத்காரம் செய்ததாக மாணவி தெரிவித்தார். அதனை தொடர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த சிகாமணி, புதுமலர் பிரபாகர், ராஜா முகமது மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த உமா, கயல்விழி போன்றோரை காவல்துறையினர் கைது செய்தனர்.