நாடு முழுவதும் தற்போது புதிய வைரஸ் காய்ச்சல் ஒன்று பரவி வரும் நிலையில், இதற்காக தமிழ்நாடு முழுவதும் வருகிற 10-ஆம் தேதி காய்ச்சலுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சற்றுமுன் அறிவித்துள்ளார். சென்னையில் 200 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் கொரோனா போன்ற நோய் தொற்று அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனமே வைரஸ்களால் ஏற்படும் நோய் தொற்று இனி அதிகமாகும் எனக் கூறியுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சென்னையில் பேட்டியளித்தபோது “தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் இருப்பது உண்மைதான். கொரோனா பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்தால் வைரஸ் தாக்குதலில் தற்காத்துக்கொள்ள முடியும் என அவர் பேசினார்.