வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் தொடர்ந்து வருவாய் உயர்ந்து வருவதாக அமைச்சர் மூர்த்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, வணிக வரித்துறையில் நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி வரையிலான மொத்த வருவாய் ரூ.1,17,458 கோடி ஆகும். கடந்த ஆண்டின் இதே நாளில் இத்துறையின் வருவாய் ரூ.92,931 கோடியாக இருந்தது. அந்த வகையில் ரூ.24,527 கோடி வருவாய் வணிக வரித்துறை அதிகமாக ஈட்டியுள்ளது என்று அவர் கூறினார். ஆகவே இது வரலாற்று சாதனை என அமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.