தமிழ்நாட்டில் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதாவது அய்யா வைகுண்டசாமியின் 191-வது அவதார தினத்தை முன்னிட்டு நாளை கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளில் ஒருவேளை தேர்வு ஏதேனும் நடைபெற்றால் இந்த அறிவிப்பு பொருந்தாது எனவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.