இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவதை எதிர்த்த வழக்கு வருகிற ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆளுநரின் உத்தரவு நகல் இல்லாமல் நீதிமன்றம் தலையிட முடியாது. முதலமைச்சர், ஆளுநர் இடையேயான கடிதம் குறித்து கேள்வி எழுப்ப இயலாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.