பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடுகளை பலியிட தற்போதைக்கு தடை இல்லை. அரசால் உரிமம் பெற்ற கூட்டத்தில் மட்டுமே பலியிட உத்தரவிடக் கோரி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில் திருச்சி ஆட்சியர், காவல் ஆணையர், எஸ்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பக்ரீத் நெருங்கக்கூடிய சூழலில் மனுத் தாக்கல் செய்துள்ளது ஏன்? கடைசி நேரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்றால் எப்படி எடுக்க முடியும்? என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.