இரு மொழிக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தி 29 ஆயிரத்து 175 ஆகும். இருமொழிக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது. 10+2+3 என்ற முறையிலும் அரசு உறுதியாக உள்ளது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.