சென்னை ஆழ்வார்பேட்டையில் தொடர் மின்னழுத்த வேறுபாடு ஏற்படுவதாக ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தன் டுவிட்டர் பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து மின்சார தேவை அதிகரித்து இருப்பதால் மின் கட்டமைப்புகளை வலுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பி.சி. ஸ்ரீராமின் பதிவுக்கு டுவிட்டர் பக்கத்திலேயே அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார்.