பொங்கல் திருவிழா பிற மாநிலங்களில் சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. குஜராத்தில் நேற்று நடைபெற்ற சங்கராந்தி விழாவில் பவநகர், விஸ்நகர் பகுதியில் காற்றாடி விடும் விழா நடைபெற்றது. இதில் மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தைகள் இருவர் உட்பட, 6 பேர் உயிரிழந்துள்ளனர். காற்றாடி நூல் அறுத்ததில் மேலும் 130 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.