கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அப்போது பிரசாரத்தில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பிரியங்கா காந்தியின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சியில் இரண்டாவது தேர்தல் வாக்குறுதி ஆகும். இதனை தொடர்ந்து இன்னும் அடுத்தடுத்து மக்களை கவரும் வகையான பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.