அந்தமான் நிகோபார் தீவு பகுதியில் சற்றுமுன் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. எனினும் இந்த நில அதிர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. முன்னதாக அருணாச்சலபிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 என பதிவானது குறிப்பிடத்தக்கது.