அந்தமான் நிகோபார் தீவுகளில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாகவும் அந்தமான் நிகோபார் தீவு பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியது. எனினும் இந்த நில அதிர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. அதோடு அருணாச்சலபிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 என பதிவானது குறிப்பிடத்தக்கது.