காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை அவரை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ராகுல் காந்தி தற்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மத்திய அரசின் முழு கவனமும் தற்போது அதானியின் வருமானத்தை அதிகரிப்பதிலும், அவரை பாதுகாப்பதிலும் தான் இருக்கிறது. பாஜக கட்சியால் பொது மக்களின் வலியை புரிந்து கொள்ள முடியவில்லை. நாட்டில் CPI 6.44% ஆக இருக்கிறது. தொடர்ந்து பொய்களை சொன்னால் பணவீக்கம் எப்படி குறையும்.? பொதுமக்களின் வலி புரியுமா.? என பதிவிட்டுள்ளார்.