ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக பான், ஆதார் கார்டு இருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, வங்கி சேவைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் ஆதார், பான் கார்டு முக்கியமான ஒரு ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையில் பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்புக்கு வருகிற ஜூன் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

தற்போது புதிய பான் கார்டு விண்ணப்பிக்க மற்றும் திருத்தம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும். அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் எல்லாம் பூர்த்தி செய்த பிறகு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.110 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html