ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வழக்கு ஏற்கனவே 2012ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்  தாமாக முன்வந்து வழக்கினை விசாரிக்கிறார். ஏற்கனவே அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், தென்னரசு ஆகியோர் வழக்கையும் அவர் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.