சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும் அதற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் போல செய்திகள் பரவி வருகிறது. இந்த போலி செய்திகளை நம்பி சிலர் மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தில் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக தற்போது மெட்ரோ ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தில் வேலைவாய்ப்புகள் இருப்பதாக வெளிவந்த தகவல்கள் போலியானவை. வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். எனவே இது போன்ற போலி செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.