திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், நமது திராவிட மாடல் அரசு அனைவருக்கும் கல்வி…. அனைவருக்கும் கல்லூரி கல்வி….. அனைவருக்கும் ஆராய்ச்சி கல்வி என்கின்ற இலக்கோடுதான் சமூக நீதிப் புரட்சியை கல்வித் துறையில் நடத்தி வருகின்றது. இன்னார் தான் படிக்க வேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி,  அனைவருக்கும் அனைத்து விதமான வாய்ப்புகளையும் உருவாக்கி தருகின்றோம். தமிழ்நாட்டு மாணவர்களை படிப்பிலும் வாழ்க்கையிலும்,  வெற்றி பெற்றவர்களாக நான் முதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வி மாணவர்களின் சிந்தனைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் CM ரிசர்ச் ஸ்கீம் வயர்கல்வி கல்வி மாணவர்களின் சிந்தனைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சி.எம் ப்ளோஷிப் ப்ரோக்ராம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு மூவலூர் ராமாமிருதம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என்னும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் படித்து, கல்லூரிக்குள் நுழைந்த 3 லட்சத்து 45 ஆயிரத்து 362 மாணவியருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு மாணவர்கள் போட்டி தேர்வுகள், ஆட்சிப் பணி தேர்வுகள், திறன் சார்ந்த தேர்வுகளுக்கு நாங்கள் தயார் செய்யும் பொருட்டு,  மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. எனது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளில் 29 லட்சம் மாணவர்களுக்கும், 32,000 ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 1 வருடத்தில் 1 லட்சத்து  40 ஆயிரம் இளைஞர்களுக்கு  வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி அனைத்து தரப்பு மாணவர்களும் தொழில் கல்வி  கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2021 – 2022, 2022 – 2023, 2023 – 2024 ஆகிய மூன்று கல்வி ஆண்டுகளில்….  இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் 28,749 மாணவர்கள் பொறியியல் மருத்துவம் வேளாண்மை சட்டம் மீன்வளம் மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர்ந்து உள்ளார்கள் என தெரிவித்தார்.