மதுரை மாவட்டத்திலுள்ள வில்லாபுரம் பழனி முத்து நகரில் சரவண விக்னேஷ்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அதிக பணிசுமை இருப்பதாக சரவண விக்னேஷ் தனது குடும்பத்தினரிடம் கூறி வந்தார்.

சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் சரவண விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவண விக்னேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.