தர்மபுரி மாவட்டத்திலுள்ள நாசன்கொட்டாய் பகுதியில் வசிக்கும் சின்ன பையன் என்பவர் காணாமல் போன தனது கன்று குட்டியை தேடி சென்றார். அப்போது அந்த பகுதியில் இருக்கும் கிணற்றில் ஒருவர் சடலமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சின்ன பையன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் கிணற்றில் கிடந்த உடலை மீட்டனர்.

பின்னர் அந்த நபரின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், 5 நாட்களுக்கு முன்பே அந்த நபர் கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.