தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சபள்ளி கிராமத்தில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்பிகா என்ற மனைவி உள்ளார் இதில் ராஜாராம் நாமாண்டஅள்ளியில் இருக்கும் தபால் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜாராமுக்கும் அவரது மனைவி அம்பிகாவவுக்கும் விவசாயம் செய்ய வாங்கிய பத்து லட்ச ரூபாய் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 17-ஆம் தேதி வேலைக்கு சென்ற ராஜாராம் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரது செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து அம்பிகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரின் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜாராமை தேடி வருகின்றனர்.