தர்மபுரி மாவட்டத்திலுள்ள கவுண்டனூர் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனப்பிரியா என்ற மகளும், நவீன் குமார் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோகனப்பிரியா தர்மலிங்கம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்m இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திருமணம் ஆனதிலிருந்து தர்மலிங்கம் குடித்துவிட்டு மோகனப்பிரியாவிடம் தகராறு செய்து வந்தார்.

இதனால் கோபத்தில் மோகனப்பிரியா தாய் வீட்டிற்கு செல்வதும் தர்மலிங்கத்தின் பெற்றோர் சமாதானப்படுத்தி மோகனப்பியாவை அழைத்து வருவதுமாக இருந்தது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் மோகனப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோகன் பிரியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.