தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூனையானூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியம் என்ற மகள் உள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பாக்கியத்திற்கும் முத்துக்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

நேற்று பாக்கியம் குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார். அப்போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் குழந்தையை உடனடியாக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு குழந்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.