இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மேற்கு கரை பகுதியில் நாப்லஸ் நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

இந்த தேர்தல் வேட்டையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இஸ்ரேல் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீனிய வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது