சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டிகளின் போது டிக்கெட் விற்பனையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சென்னையைச் சேர்ந்த அசோக் சக்கரவர்த்தி என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதாவது கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக கூறி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் ஆன்லைனில் நடந்த டிக்கெட் விற்பனை விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், விற்பனை குறித்து விவரங்களை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.