சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை அணியில் 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சேனாபதி, அம்பதி ராயுடு, ஜேமிசன், ஆகாஷ் சிங், சிஷாண்டா மகளா விடுவிக்கப்பட்டுள்ளனர். சிஎஸ்கே அணியிடம் 32.1 கோடி உள்ள நிலையில் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறும் மினி ஏலத்தில் பயன்படுத்த வாய்ப்புள்ளது. மகேந்திர சிங் தோனி 2024 ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடுவார் என்பது உறுதியாகி உள்ளது. மினி ஏலத்தில் 3 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 9 வீரர்களை சென்னை அணி வாங்க வாய்ப்புள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்த வீரர்கள்:

எம்.எஸ் தோனி (கேப்டன் &வி.கீ), மொயின் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே (வி.கீ), துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா.