16வது IPL கிரிக்கெட் போட்டியின் 65-வது லீக் சுற்று ஆட்டம் ஐதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதியது. அப்போது டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த வகையில் ஐதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு செய்து அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி களமிறங்கினர். இதையடுத்து அபிஷேக் ஷர்மா 11 ரன்கள் , ராகுல் திரிபாதி 15 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். அதன்பின் ஹென்ரிச் கிளாசென், மார்க்ரம் இரண்டு பேரும் இனைந்து சிறப்பாக விளையாடினர். அதிலும் குறிப்பாக ஹென்ரிச் கிளாசென் அதிரடி காட்டினார்.

மற்றொருபுறம் மார்க்ரம் 18 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின் வந்த ஹார்ரி புரூக் கிளாசெனுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். அதோடு கிளாசென் 49 பந்துகளில் சதம் விளாசினார். கடைசியில் 20 ஓவர்களுக்கு ஐதராபாத் 186 ரன்கள் எடுத்து குவித்தது. அதன்பின் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கோடு பெங்களூரு அணியானது களமிறங்கியது. இதன் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் டு பிளிசிஸ் ஆடினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய விராட்கோலி 63 பந்துகளில் சதம் விளாசினார்.

IPL கிரிக்கெட் தொடரில் 4 வருடங்களுக்கு பின் கோலி சதம் அடித்துள்ளார். 100 ரன்கள் அடித்த விராட் கோலி, புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சில் அவுட்டானார். மற்றொருபுறம் டுபிளிசிஸ் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசி 47 பந்துகளில் 71 ரன்கள் குவித்து அவுட்டானார். கடைசியில் பெங்களூரு அணியானது 19.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இதன் வாயிலாக பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்திருக்கிறது. முதல் 3 இடங்களில் முறையே குஜராத், சென்னை மற்றும் லக்னோ அணிகள் இடம்பெற்றுள்ளது.