நடப்பு IPL தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றியடைந்தது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் விராட்கோலி 63 பந்துகளில் 100 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். அதோடு இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இதையடுத்து நடப்பு IPL தொடரில் உங்களது ஸ்டிரைக் ரேட் சற்று குறைவாக இருக்கிறதே அதுபற்றி உங்கள் கருத்து என்ன..? என்று விராட் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு விராட் கோலி பதிலளித்ததாவது “கடந்த கால ரன்கள் பற்றி நான் திரும்பி பார்ப்பதில்லை. நான் ஏற்கனவே தன்னை நிறைய மன அழுத்தத்துக்கு உட்படுத்தி உள்ளேன். சிறப்பான ஆட்டங்கள் விளையாடியபோது சில சமயங்களில் எனக்கு நான் மதிப்பு கொடுப்பதில்லை. எனவே வெளியில் யார் என்ன சொன்னாலும் அதுபற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில் அது அவர்களின் கருத்து”என்று அவர் கூறினார்.