கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வீரர் ஜடேஜா ரசிகர்களை பிராங்க் செய்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் போட்டிகளில் ஜடேஜாவுக்கு பிறகு களம் இறங்குவது தான் தோனியின் வழக்கம்.. ஆனால் நேற்றைய போட்டியில் ஷிவம் துபே அவுட் ஆன பிறகு ஜடேஜா களமிறங்குவது போல் வந்து ரசிகர்களை ஏமாற்றினார். அதன் பிறகு ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து தோனி வந்ததை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவரை வரவேற்றனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.