சுதந்திர தினம், விஜய தசமி,  அம்பேத்கர் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு வரும் 22 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மற்றும் அசன் முகமது ஜின்னா,

ஆர்.எஸ்.எஸ் அனுமதி அளித்த விண்ணப்பத்தில் போதிய தகவல் குறிப்பிடவில்லை. ஆர்.எஸ்.எஸ் அனுமதி கேட்டுள்ள அதே காலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் பேரணி, போராட்டம் நடத்த அனுமதி கோரிஉள்ளனர். பேரணியால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. RSS பேரணிக்கு அனுமதி கோரும் வழித்தடத்தில் மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.

அனுமதிக்கோரிய விண்ணப்பத்தில் அகண்ட பாரதம் கட்டமைப்போம் எனக்கூறி, அதற்கான  வரைபடத்தில் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை இணைத்துள்ளதாக தெரிவித்தார். அப்போது குறிப்பிட்ட நீதிபதி,  இதனால் அரசுக்கு என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர், இது மிகவும் முக்கியமான விவகாரம். இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

அரசு தரப்பு வாதத்திற்கு பதில் அளிக்கும் வகையில்  பிரதிவாதங்களை ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பிலும் வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கியுள்ளார். போலீஸ் கூறிய காரணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு அமைதியான முறையில் நடத்த வேண்டும். அணிவகுப்பும் போதிய பாதுகாப்பை போலீஸ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.