ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடியது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துள்ளது. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் இந்தியா தகுதி பெற்றுவிட்டது.

இந்நிலையில் 20 வருடங்களுக்குப் பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் இறுதிப் போட்டியில் மோத இருக்கிறது. கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து தற்போது 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி மோதி இருக்கிறது. மேலும் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் 7-ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.