இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அக்சர் படேல் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதாவது ஆஸ்திரேலியா அணியுடன் நேற்று நடைபெற்ற மேட்ச் டிராவில் முடிவடைந்தது.

நேற்றைய கடைசி டெஸ்டில் டிராவிஸ் ஹெட்-டின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிவேகமாக 50 விக்கெட்டுகளை தட்டி தூக்கியுள்ளார் அக்சர் படேல். இதுவரை 2465 பந்துகளை வீசி 50 விக்கெட்டுகளை எடுத்து பும்ரா இந்த சாதனையை வைத்திருந்த நிலையில், 2205 பந்துகளிலேயே அந்த சாதனையை முந்தியுள்ளார் அக்சர் படேல்.