தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு வீடு அனைத்து நலத்திட்ட உதவிகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் குறைகளை அறிந்து அதனை அதிகாரிகள் மூலம் நிவர்த்தி செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் திருநங்கைகளுக்கு மாத மாதம் வழங்கப்படும் உதவித்தொகையை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சமூகத்தால் புறக்கணிக்கப்படும் திருநங்கைகளும் சமநிலையை அடைய வேண்டும் என்பதற்காக இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது. அதோடு ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.