தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை, இன்னைக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி ஒரு கேள்வி கேட்க கடமைப்பட்டிருக்கின்றது. உங்களுடைய தேர்தல் வாக்குறுதியில்  மதுரையில …. மதுரை மண்ணுல வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்  என நீங்க வாக்குறுதி கொடுத்தீங்க.

ஒரு வேளை நீங்க மறந்திருந்தீங்கன்னா….  .திமுக காரங்களுக்கு மறதி அதிகம். ஒருவேளை மறந்திருந்தீங்கன்னா….   உங்கள் வாக்குறுதி எண் 54 . உங்கள் தேர்தல் வாக்குறுதில மதுரை மண்ணிலே  வேளாண் பல்கலைக்கழகம்  அமைக்கப்படும் என்று சொன்னீங்க. வேளாண் பல்கலைக்கழகம் எங்கு இருக்குன்னா  ? அந்த செங்கல குடுங்க அண்ணா என்று செங்கலை உயர்த்தினார்..

மதுரை மண்ணில் இருக்கக்கூடிய வேளாண் பல்கலைக்கழகம் என் கையில் இருக்குதுங்க. ஒரு செங்கலாக இருக்கிறது. நீங்க எதுவுமே செய்ய மாட்டீங்க, செய்கிறவர்களையும்  விட மாட்டீங்க. கொடுக்கணும்னு நினைச்சவங்களையும் பாராட்ட மாட்டீங்க. ஒரு மனுஷன் அஞ்சு வருஷம் எம்பியா இருந்து 48 ஆயிரம் கோடி கன்னியாகுமரிக்கு கொண்டு வந்தா..

கொண்டு வந்த பணத்தையும் பயன்படுத்த மாட்டீங்க. கொண்டு வந்த பணத்திலே 28 ஆயிரம் கோடி பாக்கி இருக்குது சகோதர சகோதரிகளே… திமுகவ என்னன்னு சொல்றது நீங்களே சொல்லுங்க…. மோடி அவர்களை பத்தி  நல்லதெல்லாம் பேசிட்டோம். ஆனால் திமுகவை பத்தி  பேசாம போனா  நீங்க  விட மாட்டீங்க என தெரிவித்தார்.