தியாகம் செய்வதற்கே பிறந்தது பண்டித நேருவின் குடும்பம் என்று தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக செல்வ பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள twitter பதிவில், எதிர்க்கட்சியினர் ஒன்றிணைவதை தடுக்க பாஜக அரசு திட்டம் தீட்டுகிறது. தியாகம் செய்வதற்கே பிறந்தது பண்டித நேருவின் குடும்பம். நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தலைவர் அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம் என அவர் பதிவிட்டுள்ளார்.