தமிழகத்தில் அரசு துறையில் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் என்ற தேர்வை நடத்தி வருகின்றது. அதன்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு கடந்த வருடம் ஜூலை மாதம் தேர்வு நடந்து முடிந்தது.

இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட நிலையில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். தற்போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதனை தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளம் மூலமாக cv பட்டியலை பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.