அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  இன்றைக்கு சிறுபான்மை மக்கள்  இஸ்லாமிய – கிறிஸ்தவர்களுக்கு  இன்றைக்கு பிரச்சனை வருகின்ற போது முதல் குரல் கொடுப்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டாக விளங்குகின்றேன்.

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,  இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா இருபெரும் தலைவர்களுக்கு எப்படி தமிழகத்த்தில் ஆதரவளிதற்கோளோ, அதே போல அனைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகதிற்கும்  வருங்காலத்தில் மக்களுடைய ஆதரவைப் பெற்று 39 இடங்கள்,  தமிழகத்தில் இருக்கின்றன பாண்டிச்சேரியில் 1 இருக்கிறது. 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

நாம ஒரு மாநில கட்சி, தேசிய கட்சி அல்ல. மாநிலத்தில் இருக்கின்ற பிரச்சனைதான் நாம் முன்வைத்து செயல்படுகின்றோம். மாநில மக்களுடைய நலன் தான் நமக்கு முக்கியம். இந்த மண்ணில் பிறந்த தமிழ்நாட்டு மக்கள் எவரும் பாதிக்கப்படக்கூடாது. தமிழ்நாடு மக்களுக்கு நன்மை கிடைத்தால் நாங்கள் பாராட்டுவோம்,  தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட,  எந்த திட்டத்தையும் கொண்டு வந்தாலும் முதல் ஆளாக  எதிர்ப்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி என்பதை ஆணித்தனமாக சொல்கிறோம் என தெரிவித்தார்.