ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் பீலா ராஜேஷ், எரிசக்தி துறை முதன்மை செயலாளர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ரமேஷ்சந்த் மீனா சிறப்பு திட்ட அமலாக்கத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வீர பிரதாப் சிங் வணிக வரித்துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சந்திரசேகர் சக்மூரி பட்டுப்புழு வளர்ச்சித்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விஜயா ராணி கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் மற்றும் ஆசியா மரியம் சிறுபான்மையினர் நல இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.