சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி வரை பல இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையில் நள்ளிரவு முதல் கன மழை பெய்த நிலையில், தற்போது எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்காாமல் போக்குவரத்து சீராக இருக்கிறது.

சென்னையில் கன மழை காரணமாக சென்ட்ரலில் இருந்து இயக்கப்படவேண்டிய 7 ரயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 7 ரயில்கள் திருவள்ளூரு, ஆவடி, கடற்கரை ரயில் நிலையங்களிலிருந்து இயக்கப்ப்டும் என ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.