திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், திருமங்கலம் கோபாலை தலைவரிடத்தில் போய் அவரை அறிமுகப்படுத்தக்கூடிய சூழ்நிலையை எனக்கு ஏற்பட்டது. தலைவர் கலைஞரிடம் அறிமுகப்படுத்தினேன். உடனே தலைவர் கேட்டார்…  ஆளப் பார்த்தாலும் வாட்டம் சாட்டமா, இருக்கிறான்.  நமக்கு ஒரு பாதுகாப்புக்கு இவனை வைத்துக் கொள்ளலாமா ? பயன்படுத்திக் கொள்ளலாமா ? என்று தலைவர் கேட்டார்.

உடனே அப்படியே சரென்று தலைவர் காலில் விழுந்து… இது  ஒன்னு போதும் எனக்கு…  உங்களுக்கு பாதுகாப்பாக கடைசி வரை உயிர் போகும் வரை நிச்சயமாக இருப்பேன் என்று சொல்லிட்டு கடைசி வரை திருமங்கலம் கோபால் உயிர் பிரிகின்ற வரையிலே தலைவருடன் இருந்தார்.  அதை தான் நான் இப்போது  எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

திருமங்கலம் கோபால் உடைய துணைவியார் அவர்கள் நன்றியுரை ஆற்றுகின்ற பொழுது சில செய்திகளை எடுத்துச் சொன்னார். திருமங்கலம் கோபாலுடைய  திருமணத்தையும் தலைவர் கலைஞர் தான்  நடத்தி வைத்திருக்கிறார். அவருடைய 3 பிள்ளையினுடைய திருமணத்தையும் தலைவர் கலைஞர் தான் நடத்தி வைத்திருக்கிறார்.

நான்காவது மகனுக்கு திருமணம் நான் நடத்தி வைத்திருக்கிறேன். அடுத்து மகன்களுக்கும் பிறக்கக்கூடிய பேரன் – பேத்திகளுக்கும் நான் திருமணம் தான் நடத்தி வைப்பேன் என்ற நம்பிக்கை நிச்சயம் இருக்கிறது. அந்த அளவிற்கு நாங்கள் உரிமை பெற்றவர்கள்… அந்த அளவிற்கு எங்கள் மீதும்,  கழகத்தின் மீதும் ஈடுபாடு கொண்டவர்கள் நம்முடைய திருமங்கலம் கோபாலினுடைய குடும்பம் என்பதை எல்லோரும் நன்றாக அறிவீர்கள் என தெரிவித்தார்.